ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

என் மேல் விழுந்த மழைத் துளியே - மே மாதம்

Lyrics: Vairamuthu
Singer: Jayachandran, Chitra

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன் (என் மேல்)

மண்ணைத் திறந்தாள் நீரிருக்கும் - என்
மனதைத் திறந்தாள் நீயிருப்பாய்
ஒளியைத் திறந்தாள் இசை இருக்கும் - என்
உயிரைத் திறந்தாள் நீயிருப்பாய்
வானம் திறந்தாள் மழை இருக்கும் - என்
வயதைத் திறந்தாள் நீயிருப்பாய்
இரவைத் திறந்தாள் பகல் இருக்கும் - என்
இமையைத் திறந்தாள் நீயிருப்பாய் (என் மேல்)

மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கடலும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
காற்றும் மலையும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை ஆய்விடுமோ (என் மேல்)

சனி, 12 பிப்ரவரி, 2011

மைனா மைனா

மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பன்னுது
மைனா மைனா என்ன சொல்ல என்ன கொல்லுற
சொல்லுபுள்ள என்ன ஆச்சு
சொல்லாமலே மறைக்காதே
நெஞ்சுமேல கையவச்சு கண்ணால நீ சிரிக்காதே
என்ன மறந்தே தள்ளி இருந்திட துணிஞ்சது சரியா சரியா
தன்னந்தனியே என்ன தவிப்புல
எரிஞ்சதேன் முறையா முறையா
எனக்கேதும் புரியவே இல்ல பதில் பேச வருவியா
மைனா மைனா எலேய்…..
எலேய்…. எலேய்…. எலேய்….

ம: சூவினிக்க மண்ணெண்ணைய போல
சித்திரிக்கி உச்ச வெயில் போல
நீயும் எனக்காக உயிர் வாழ்வேன் உனக்காக
சக்கரதப்போல சுத்தி வரும் ஆச
கண்ணுமைய வாங்கி தீதிக்கிறேன் மீச
அடியே …. நீ மனலதிரிச்ச கயிறா
கோடியே …. நீ உசுர கடைஞ்ச திரா (மைனா)

M: கட்டவண்டி செல்லும் வழி தேட
உண்டிவில்லும் ஜல்லிக்கல்ல தேட
நானும் உன்னைத்தேடி அலைஞ்சேனே மனவாடி
பள்ளிக்கூடம் போயும் ஏறவில்ல பாடம்
பல்லாங்குழி ஆட கூட இல்ல நீயும்
தொணையா நீ இருந்தா ஜெயிப்பேன் ஊர
நீ கலைஞ்சா நெனைப்பேன் தீர

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

நெஞ்சம் எல்லாம் - ஆயூத எழுத்து பாடல் வரிகள்

M: யே அயே அயே ஓர் உண்மை சொன்னால்
அயே அயே அயே நேசிப்பாயா

F: நெஞ்சமெல்லாம்

M: காதல்

F: தேகமெல்லாம்

M: காமம்

F: உண்மை சொன்னால்

M: என்னை

F: நேசிப்பாயா?

M: காதல் கொஞ்சம்

F: கம்மி

M: காமம் கொஞ்சம்

F: துகள்

M: மஞ்சத்தின் மேல்

F: என்னை M &

F: மன்னிப்பாயா?

M: உண்மை சொன்னால் நேசிப்பாயா மஞ்சத்தின் மேல் மன்னிப்பாய

M & F: உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாய (REPEAT ONCE)

M: நேசிப்பாயா, நேசிப்பாயா, நேசிப்பாயா,
நேசிப்பாயா,
பெண்கள் மேலே மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்த பார்வை பார்க்கும் போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்
வீசாதே மழை மேகம் எனக்கு
என் ஹர்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு
வா சோகம் இனி நமக்கெதுக்கு
யார் கேக்கே நமக்கு நாமே வாழ்வதற்கு

M: உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாய (REPEAT BY FEMALE)

F: நெஞ்சமெல்லாம்

M: காதல்

F: தேகமெல்லாம்

M: காமம்

F: உண்மை சொன்னால்

M: என்னை

F: நேசிப்பாயா?

M: காதல் கொஞ்சம்

F: கம்மி

M: காமம் கொஞ்சம்

F: துகள்

M: மஞ்சத்தின் மேல்

F: என்னை

M & F: மன்னிப்பாயா?

F: காதல் என்னை வருடும் போதும்
உன் காமம் என்னை திருடும் போதும்
என் மனசெல்லாம் மார்கழி தான்
என் கனவெல்லாம் கார்த்திகைதான்
என் வானம் என் வாசல் திறந்து
என் ப்தூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள் நான் அறியவில்லை
நான் அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை

M: அயே அயே அயே ஓர் உண்மை சொல்லு
அயே அயே அயே நேசிப்போம்

F: நெஞ்சமெல்லாம்

M: காதல்

F: தேகமெல்லாம்

M: காமம்

F: உண்மை சொன்னால்

M: என்னை

F: நேசிப்பாயா?

M: காதல் கொஞ்சம்

F: கம்மி

M: காமம் கொஞ்சம்

F: துகள்

M: மஞ்சத்தின் மேல்

F: என்னை

M & F: மன்னிப்பாயா

M: உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா

F: மனசெல்லாம் மார்கழி தான்
இரவெல்லாம் கார்த்திகை தான் ...

Background:

M: உண்மை சொன்னால் நேசிப்பாயா

மஞ்சத்தின் மேல் மன்னிப்பாய

நன்றி

Dishant.com

சனி, 1 ஜனவரி, 2011

வசீகரா - மின்னலே

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண் உறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண் உறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே..

ஆடை மழை வரும் அதில் நனைவோமே குளிர் காய்ச்சலோடு சேரும்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய் அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையே தான் எதிர் பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டை உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண் உறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

தினமும் நீ குளித்ததும் என்னை தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீர் என்று பின்னல் இருந்து என்னை
நீ அணைப்பாய் அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதை சொல்ல கூட தெரியாதே
காதல் என்னும் முடிவினில் என் கடிகார நேரம் கிடையாதே

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண் உறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே..

சனி, 25 டிசம்பர், 2010

பெண்ணும் நதியும் வைரமுத்து அவர்களின் ஒப்பீடு

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள்முகமே (2)

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே (2)

காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உறையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ (2)

(
தீம்தனனா தீம்தனனா..)

வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு
ஹோ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே
அது நங்கையின் குணமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்


(
தீம்தனனா தீம்தனனா..)
தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே
தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே
பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போக கூடும்

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

(
தீம்தனனா தீம்தனனா..)