ஞாயிறு, 2 ஜனவரி, 2011

நெஞ்சம் எல்லாம் - ஆயூத எழுத்து பாடல் வரிகள்

M: யே அயே அயே ஓர் உண்மை சொன்னால்
அயே அயே அயே நேசிப்பாயா

F: நெஞ்சமெல்லாம்

M: காதல்

F: தேகமெல்லாம்

M: காமம்

F: உண்மை சொன்னால்

M: என்னை

F: நேசிப்பாயா?

M: காதல் கொஞ்சம்

F: கம்மி

M: காமம் கொஞ்சம்

F: துகள்

M: மஞ்சத்தின் மேல்

F: என்னை M &

F: மன்னிப்பாயா?

M: உண்மை சொன்னால் நேசிப்பாயா மஞ்சத்தின் மேல் மன்னிப்பாய

M & F: உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாய (REPEAT ONCE)

M: நேசிப்பாயா, நேசிப்பாயா, நேசிப்பாயா,
நேசிப்பாயா,
பெண்கள் மேலே மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்த பார்வை பார்க்கும் போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்
வீசாதே மழை மேகம் எனக்கு
என் ஹர்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு
வா சோகம் இனி நமக்கெதுக்கு
யார் கேக்கே நமக்கு நாமே வாழ்வதற்கு

M: உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாய (REPEAT BY FEMALE)

F: நெஞ்சமெல்லாம்

M: காதல்

F: தேகமெல்லாம்

M: காமம்

F: உண்மை சொன்னால்

M: என்னை

F: நேசிப்பாயா?

M: காதல் கொஞ்சம்

F: கம்மி

M: காமம் கொஞ்சம்

F: துகள்

M: மஞ்சத்தின் மேல்

F: என்னை

M & F: மன்னிப்பாயா?

F: காதல் என்னை வருடும் போதும்
உன் காமம் என்னை திருடும் போதும்
என் மனசெல்லாம் மார்கழி தான்
என் கனவெல்லாம் கார்த்திகைதான்
என் வானம் என் வாசல் திறந்து
என் ப்தூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள் நான் அறியவில்லை
நான் அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை

M: அயே அயே அயே ஓர் உண்மை சொல்லு
அயே அயே அயே நேசிப்போம்

F: நெஞ்சமெல்லாம்

M: காதல்

F: தேகமெல்லாம்

M: காமம்

F: உண்மை சொன்னால்

M: என்னை

F: நேசிப்பாயா?

M: காதல் கொஞ்சம்

F: கம்மி

M: காமம் கொஞ்சம்

F: துகள்

M: மஞ்சத்தின் மேல்

F: என்னை

M & F: மன்னிப்பாயா

M: உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா

F: மனசெல்லாம் மார்கழி தான்
இரவெல்லாம் கார்த்திகை தான் ...

Background:

M: உண்மை சொன்னால் நேசிப்பாயா

மஞ்சத்தின் மேல் மன்னிப்பாய

நன்றி

Dishant.com

சனி, 1 ஜனவரி, 2011

வசீகரா - மின்னலே

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண் உறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண் உறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே..

ஆடை மழை வரும் அதில் நனைவோமே குளிர் காய்ச்சலோடு சேரும்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய் அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையே தான் எதிர் பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டை உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண் உறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

தினமும் நீ குளித்ததும் என்னை தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீர் என்று பின்னல் இருந்து என்னை
நீ அணைப்பாய் அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதை சொல்ல கூட தெரியாதே
காதல் என்னும் முடிவினில் என் கடிகார நேரம் கிடையாதே

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண் உறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே..

சனி, 25 டிசம்பர், 2010

பெண்ணும் நதியும் வைரமுத்து அவர்களின் ஒப்பீடு

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள்முகமே (2)

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே (2)

காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உறையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ (2)

(
தீம்தனனா தீம்தனனா..)

வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு
ஹோ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே
அது நங்கையின் குணமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்


(
தீம்தனனா தீம்தனனா..)
தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே
தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே
பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போக கூடும்

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

(
தீம்தனனா தீம்தனனா..)

ஞாயிறு, 10 மே, 2009

மெக்குலத்தை தூக்கி எறியுங்கள் ஷாருக், உதவிக்கு ஜான் புக்கனனையும் அனுப்பலாம்





இதை எழுத தொடங்கும்போது மறுமடியும் ஒரு மகத்தான இன்னிங்க்சை ஆடியுள்ளார் , மெக்குலம் . ஆசிய வீரர்களை மதிக்காத தன்மை .பி.எல் அணிகள் பலவற்றுக்கு உள்ளது , ராஜஸ்தான் ராயல்சை தவிர பிற அணிகள் ஆசிய வீரர்களின் பலத்தின் மீது நம்பிக்கை வைப்பதில்லை.
எல்லா அணிகளும் ஆஸ்திரேலியே வீரர்களையே பெருமபாலும் நம்புகின்றன. ஆஸ்திரேலியாவின் வார்னே நம் வீரர்கள் மீது வைக்கும் நம்பிக்கையை கூட, மற்ற அணி தலைவர்கள் (தோணி உட்பட) வைப்பதில்லை.


யூசுப் பதான் என்ற ஒரு பேட்டிங் சைத்தானை இந்திய கிரிகெட் அணிக்கு உருவாக்கி தந்ததில் அவருக்கு பெரும் பங்கு உள்ளது. அடுத்து பி எல் ஆரம்பிக்கபட்டதன் நோக்கமாய் சொல்லப்படும் இளம் வீரர்களுக்கு அனுபவம் எனும் குறிகோளையும் அந்த ஒரு அணி மட்டுமே நிறைவேற்றி வருகிறது.
வங்கதேச ஆல்ரௌண்டரான சாகிப் அல் ஹசன் எனும் மிக சிறந்த பேட்டிங் மற்றும் சுழல் பந்து வீச்சாளரை பி எல்லில் அந்த அணி வீரரும் எடுக்கவில்லை. நமது சென்னை அணி ஒரு படி மேலே போய் உலகின் தலை சிறந்ததொரு இங்கிலாந்து வீரரை விலைக்கு வாங்கி வாங்கி கட்டி கொண்டது. இதில் அந்த அணி தலைவர் வேறு இங்கு விளையாடியதால் அவரது கால் முறிந்து போனதாகவும் இது தங்கள் அணிக்கு பெரும் இழப்பு என்றும் கூறுகிறார்.சிரிப்பதை தவிர ஒன்றும் முடியவில்லை.
மல்லையா சாராயத்தில் சம்பாதித்ததை கிரிக்கெட்டில் விடவேண்டும் என்பது அவரது தலை எழுத்து.இவருக்கு பீட்டேர்சன் எனும் உலகின் மிக சிறந்த வீரர் ஒருவர் கிடைத்தார். சாமி! அணியை தோற்கடிக்க இவர் ஒருத்தர் போதும் என்ற போதிலும் துணைக்கு ரெண்டு நியூசி வீரர் கள் பிரமாத படுத்திவிட்டனர்.
சென்னை அணியில் ஜாகோப் ஓரத்தின் இடத்தில் இலங்கையின் துசராவை களம் இறக்கி இருக்கலாம். அவர் மிக சிறந்த வேக பந்து வீச்சாளர் என்பதுடன் பட்டின்கிலும் ஓரளவுக்கு கை கொடுக்க கூடியவர். இவர் இலங்கையின் அடுத்த வாஸ் என்று வர்ணிக்க படுபவர். பிளிண்டோப்பை விட எந்த விதத்திலும் சோடை போகாதவர்.
இதெல்லாம் பரவாயில்லை மேற்கிந்திய தீவுகளை உலக கோப்பையை விட்டு விரட்டி அடித்த வாங்க தேச கேப்டன் அஷ்ரப்புல் மும்பை அணியால் களம் இறக்கபடுவதே இல்லை.
கொல்கத்தா அணியோ அதிக விலைக்கு வாங்கியும் மொர்டசாவை களம் இறக்குவதே இல்லை. இத்தனைக்கும் அவரது பந்து வீச்சு திறமையும் பேட்டிங் பலமும் அனைவரும் அறிந்ததே. இந்த வீரனை விலைக்கு வாங்காமல் இருந்திருந்தால் ஆவது பிறராவது வாங்கி இருப்பார்.இப்படி விலைக்கு வாங்கி ஒருவரது திறமையை முடக்குவது நியாயமா?
இப்படி தொட்டதற்கெல்லாம் பயிற்சியாளரை பிடித்து தொங்கும் மெக்குலத்தை முதலில் தூக்கி எறிந்தால்தான் கொல்கத்தா உருப்படும். கங்குலியை போன்று இளம் வீரர்களை ஊக்குவிக்கும் ஒரு கேப்டனே இப்போது அணியின் தேவை.
சென்னை வெற்றி பாதையில் பயணிப்பதால் இந்திய அணிக்கு ஒரு நன்மை உள்ளது . ரெய்னாவின் தொடரும் அதிரடியும் தோனியின் ஆட்டம் மறுபடியும் வலுவகியுள்ளதும் தான் அது. பத்ரிநாத் படம் கட்டினாலும் அது இந்திய அணிக்கு வந்ததும் செல்லாமல் போவது வருத்தமாய் உள்ளது. இந்த முறை பி எல் சரியில்லை .சிக்ஸர்கள் பறந்தால் ஆடவேண்டிய சிட்டுக்கள் முதல் பத்து ஓவர்கள் பந்து வீசும் அணிக்காக எப்படியும் ஒரு நான்கைந்து முறை ஆடுகிறார்கள். என்ன செய்வது சிக்ஸர் அடிக்காமல் சிட்டுகளை ஆட வைக்க இதை எளிய முறை வேறு உள்ளத என்ன...
பதிவு பிடிஞ்சிருந்தா வோட் பண்ணுங்க இல்லாட்டியும் வோட் பண்ணுங்க ... வேற வழி இல்ல உங்களுக்கு எனக்கும்தான்...


புதன், 4 மார்ச், 2009

பாராளுமன்ற தேர்தலும் படாத பாடு படும் மாணவ கண்மணிகளும்.காணாமல் போன தோழர் அறிவிழியும்.

வந்துடுச்சு அடுத்த தேர்தல் தேதி அறிவிப்பு .இனி நம்ம பசங்களுக்குஇருக்கு ஆப்பு. நமது நாட்டில் தான் தேர்தல் என்றவுடன் பள்ளி கல்லூரிதேர்வுகளை மூன் கூட்டியே நடத்தும் ஒரு அவலம் காணப்படுகிறது.

நம் மாணவ கண்மணிகளில் நகரங்களில் இருப்போரை தவிர ஏனையகிராமப்புற பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் ஆசிரியர்களின் ஊக்குவிப்பாலும்அவர்களது அயராத உழைப்பினாலும் தான் தேர்ச்சியே அடைவர் என்பதுஅனைவரும் அறிந்ததே.

அவர்களுள்ளும் வைரங்கள் இருக்கலாம், எனினும் அவர்களைகண்டறிந்து பட்டை தீட்டுவது ஆசிரியரின் கடமையாகும்.பெரும்பாலானமாணவர்கள் தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பே தேர்வை எதிர் கொள்ள தயார்ஆவர் என்பது எனது கருத்து.

அவர்களக்கு ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புக்கள் மற்றும் தேர்வுகள் வைத்துஅவர்களது தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க செய்வர்.

கல்லுரிகளில் நிலைமை சற்று தேவலாம். மாணவர்கள் தேர்ச்சி பெறாதபட்சத்தில் மறுமுறை எழுதி தேறலாம்.இதற்கான செலவும் குறைவு.இதிலும்சிக்கல் இருக்கிறது அது யாதெனில் இறுதியாண்டு மாணவர்கள் தமது தேறாததேர்வுகள் பலவற்றை தீர்க்கும் பொருட்டு எழுதுவர். அதற்கான கால அளவும்தேர்தல் அறிவிப்பால் மண்ணாகும் என்பது நிதர்சனமான உண்மை.

இப்படி தேர்தல்களை இந்த பருவத்தில் நிகழ்த்துவதை தேர்தல் ஆணையம்சற்று மாற்றலாம் எனினும் காஸ்மீர் போன்ற பகுதிகளில் நிகழும் பருவ காலசீதோசன நிலையை கருத்தில் கொண்டே தேர்தல்கள் இக்காலத்தில்நிகழ்கின்றன.

நம் தமிழகத்தில் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்தபாடில்லை. எதிரிகள் இனி நண்பர்கள் ஆவர்; நண்பர்கள் எதிரிகள் ஆவர்.கலைஞர் அவர்களின் தொலைக்காட்சி பெட்டிகளும் எரிவாயு அடுப்புகளும்ஓட்டுகளை அள்ளுமா அல்லது அம்மையார் மற்றும் அவர்களது கூட்டணியின்
புகார்கள் அள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்போம்.

நியுசிலாந்தில் அதிரடியாக வெடித்த சேவாக் மற்றும் ரெய்னாவுக்குவாழ்த்துக்கள்.
கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய கோழைகளுக்கு கண்டனங்கள்.
இத்தாக்குதல் நிகழாமல் இருப்பின் தொடர்ந்து இரண்டு இரட்டை சதங்களைவிளாசிய சமரவீராவுக்கு பாராட்டுகள் குவிந்து இருக்கும்.

இன்றோ அவர் கால்களில் அடிபட்டு அடுத்த தொடருக்கு வெகு நாட்கள்காத்திருக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளார்.அவர் விரைவில் குணம்பெற இறைவனை வேண்டுவோம்.

இலங்கை அணி தலைவர் மகேலே தலைவராக விளையாடும் கடைசிதொடரில் இப்படி அதிர்ச்சியை அளித்த கயவர்கள் நாசமாய் போக.

இலங்கையில் தொடரும் இனபடுகொலைகளும் விரைவில் வீழஇறைவனை வணங்குவோம்.

நண்பர் அறிவிழி அவர்களே எனக்கு இந்த பதிவுலகத்தை அறிமுகம் செய்தார் எனினும் அவர் தற்சமயம் பதிவுகள் இடுவது இல்லை.இதற்கான காரணம் எனக்கு தெரிந்தவரை அவர் பதிவிற்கு அடிமை ஆக தொடங்குவதாக அவருள் எழுந்த ஐயயமே! இது முற்றிலும் உண்மை முன்பு எனக்கு பல விதங்களில் கணினியை விளக்கி கூறிய பதிவிட தொடங்கிய பிறகு பெரும்பாலும் அதனை பற்றியே பேசினார் .

இதனால் வெறுப்பான நான் சில காலம் பதிவிட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் அவர் இதனை விட்டு மீண்டது எனக்கு மகிழ்ச்சியே.

எனினும் அவரை போன்ற மிக நாகரிகமான துடிப்பான ஒரு பதிவர் இனி வருவர்
என்பது கஷ்டம்தான்.எனவே அவர் மீண்டும் பதிவிட வேண்டும் என்பதே எனது ஆசை.

அவரது பிரியம் போல் அவர் மீண்டும் செயல் படவேண்டும் என்பதே எனது ஆசை.

















ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

the new survivers in cricket

வியாழன், 25 டிசம்பர், 2008

2008ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள்














சிறந்த சுழல் பந்துவீச்சாளர் :அஜந்தா மென்டிஸ்


சென்ற ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இவரது நிலைப்பாடு

3 போட்டிகளில் பங்கேற்று 26 விக்கெட்டுகளை 18.38 எனும் சராசரியோடு கைப்பற்றியுள்ளார்.

ஒரு நாள் போட்டிகளில் இவரது செயற்பாடு

18 போட்டிகளில் பங்கேற்று 48 விக்கெட்டுகளை 10.12 எனும் சராசரியோடு கைபற்றி அசத்தியுள்ளார்.

கிரிக்கெட்டினுள் நுழையும்போதே தன் திறமை முழுவதையும் மிக அற்புதமாக வெளிப்படுத்தி ஜொலித்த மென்டிஸ் தான் இந்த ஆண்டின் மிக சிறந்த பந்து வீச்சாளரும் ஆவார்.

சிறந்த வேக பந்து விச்சாளர்கள்:
இந்த துறையில் இந்த ஆண்டு பலர் ஜொலித்து உள்ளனர்.
டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்ரிக்காவின் டேல் ஸ்டைன் ,இந்தியாவின் ஜாகிர் கான் ,இஷாந்த் சர்மா ,பாகிஸ்தானின் தன்வீர்,இங்கிலாந்து அணியின் பிளின்டாப் ,ஆஸ்திரேலியாவின் லீ ,ஜான்சன் என இந்த பட்டியல் நீளும்.சில வீரர்களை நான் குறிப்பிடாமல் விட்டிருக்கலாம்.

இவர்களுள் என்னை கவர்ந்தவர் ஜாகீர் கான்.



இவர் தனது இழந்த மீட்டதோடு நில்லாமல் வேகபந்து வீச்சுக்கு ஒத்துழைக்காத இந்திய மைதானங்களிலும் அசத்த கூடிய அளவிற்கு முன்னேறியுள்ளார்.அனுபவ வீரராக இவர் பிற வீரர்களின் பந்து வீச்சில் காணப்படும் குறைகளையும் களைந்து அணிக்கு உற்சாகம் ஊட்டுகிறார். பிறரையும் நல்லவிதமாக செயல் பட தூண்டும் இவரே இந்த ஆண்டின் சிறந்த வேக பந்து வீச்சாளர் ஆவார்.

சிறந்த பீல்டர்கள் :
யுவராஜ் சிங்:ஸ்டைலான தோரணை பாண்டியான இவர பத்தி சொல்லவே வேணாம். பந்த பிடிக்க இவர் எடுக்குற ரிஸ்க் சூப்பர்.


சுரேஷ் ரெய்னா : இந்தியாவின் மிக அற்புதமான பீல்டர்களில் ஒருவர்.தனது திறமைக்கு ஏற்ப துடிப்பாக பீல்டிங் செய்யும் இவர் என் கனவு அணியில் நிரந்தரமானவர்.

இங்கிலாந்து அணியின் காலிங்க் வூட்டின் பீல்டிங் அற்புதம் முப்பத்திரெண்டு வயதிலும் இவரது பீல்டிங் கங்காருவை நியாபக படுத்துகிறது.


சிறந்த விக்கெட் கீப்பர்கள்:
ஆடம் கில்க்ரிஷ்டின் விலகலுக்கு பிறகு சிறந்த விக்கெட் கீப்பர் யார் என்பதில் இந்தியாவின் தோனி ,தென்னாப்ரிக்காவின் பௌச்சர் ,இலங்கையின் சங்கக்கரா ஆகியோரிடேயே பலத்த போட்டி நிலவுகிறது. இனி வரும் காலங்களில் தான் யார் சிறந்த விக்கெட் கீப்பர் என தெரிய வரும்.
 

சிறந்த டெஸ்ட் மட்டையாளர் :
இந்தியாவின் அதிரடி துவக்க வெட்டு சேவக் தான் இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் மட்டையாளர். இந்த குவித்துள்ள ரன்கள் 1492 ஆகும்.



சிறந்த ஒரு நாள் போட்டி மட்டையாளர்:

கவுதம் காம்பிர் தான் இந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் போட்டி மட்டையாளர் ஆவார்.

சிறந்த அனைத்து ஆட்டக்காரர் :
ஜார்கண்ட் சிங்கம் டோணிதான் அவர்.



இந்த ஆண்டின் சிறந்த வீரர் கவுதம் காம்பிர் ஆவார்.

வரவங்க ஓட்ட போட்டு தாக்குங்கோ!