பூ வாசம் புறப்படும் பெண்ணே ,
நான் பூ வரைந்தால் ,
தீ வந்து விரல் சூடும் கண்ணே ,
நான் தீ வரைந்தால் ,
உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் ,
உயிருள்ள நானோ என்னாகுவேன் ?
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி ...
ம்ம் , புள்ளி சேர்ந்து , புள்ளி சேர்ந்து ஓவியம் ,
உள்ளம் சேர்ந்து , உள்ளம் சேர்ந்து காவியம் ,
கோடு கோடு ஓவியத்தின் பாகமே ,
ஊடல் போடா காதல் என்று ஆகுமே ,
ஒரு வானம் வரைய நீல வண்ணம் ,
நம் காதல் வரைய என்ன வண்ணம் ?
ஏன் வெட்கத்தை திரள் தொட்டு ,
விரலேண்டும் போலே கொண்டு ,
நம் காதல் வரைவோமே , வா ,
ஓவியத்தின் ஜீவன் எங்க உள்ளது ?
உற்று பார்க்கும் ஆளில் கண்ணில் உள்ளது ,
பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது ?
ஆண் தொடாத பாகம் தன்னில் உள்ளது ,
நீ வரைய தெரிந்த ஒரு நவீன கவிஞன் ,
பெண்ணின் வசியம் தெரிந்த ஒரு நலிந்த கலைஞன் ,
மேகத்தை ஏமாற்றி மண் சேரும் மலை போல ,
மடியோடு விழுந்தாயே , வா -ஆஅ ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக