பாகிஸ்தானின் நிலவரம் சில மாதங்களாக கலவரமாக உள்ளபோது அங்கு தற்சமயம் வலுவானவர்கள் தீவிரவாதிகள் என்பதை நமது உளவு துறை உணராதது ஏன் என்ற வினா தற்சமயம் வலுத்துள்ளது.
இலங்கையில் வாழும் நம் தமிழ் சகோதர சகோதிரிகள் இங்கு உயிர் பிழைக்க ஓடி வருவது தான் நமது தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ,இந்த கொடியவர்கள் வருகை பற்றி நமக்கு கவலை இல்லை என்று கடற்படை எண்ணியது ஏன்?
வெளிநாட்டு பயணிகளை பிணை கைதிகளாய் வைத்து நம்மை மிரட்டி தம் காரியத்தை நிறைவேற்ற துடிக்கும் இந்த கயவர்கள் நம் எல்லைக்குள் நுழைய காரணம் இந்த கடற்படையின் அலட்சிய போக்கே .
ஒரு நாட்டு கடற்படையின் முக்கிய பணியே தம் நாட்டு கடற்பரப்பில் அந்நியர் நுழைவதை தடுப்பதும் ,தம் நாட்டை சேர்ந்த தேச விரோதிகள் கடற்பரப்பை துஷ்பிரோயோகம் செய்யா வண்ணம் காப்பதும் ஆகும்.
இதனை செய்ய தவறிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.சுமார் 150 பேர் உயிரிழக்க காரணம் கொலை வெறி பிடித்த தீவிரவாதிகள் அல்ல ,அவர்கள் இங்கு நுழைய காரணமாய் இருந்த அதிகாரிகளே.தீவிரவாதிகள் எப்போது வாய்ப்பு கிட்டும் இந்திய மக்களின் உயிரோடு விளையாடலாம் என்று காத்துகிடக்கும் கொடியவர்கள் என்பது நாம் அறிந்ததே!
நஞ்சினும் கொடிய அப்பகைவரிடத்து நம் அப்பாவி மக்களை ஒப்படைத்த இந்த கடற்படையை இன்னும் எந்த பதிவரும் சாடதது ஏன்?முதற்கட்டமாக அந்த பிராந்திய தளபதியை பதவி நீக்கம் செய்து ,அவர் மீது விசாரணை நடத்தி அவருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.
தீவிரவாதம் பாகிஸ்தானில் தான் இருக்கிறது என்ற ஒபாமாவின் கூற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத குழுக்களை கைது செய்ய இன்டர்போல் பாகிஸ்தானில் நுழைய வேண்டும் .அந்நாட்டின் அணு சக்தி வளங்கள் எங்கே யார் கண்காணிப்பில் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும்.
இதை விடுத்து இங்கு வாழும் நம் சகோதர இஸ்லாமியர்களை பழி கூறும் அரசியல்வாதிகளின் பேச்சை கேட்டு நடக்க வேண்டாம்.
அன்பை போதிக்கும் நம் மதங்களின் பண்பை உணராது
அரசியல் போதிக்கும் ஆந்தைகளின் பேச்சை கேட்டு
மனிதம் காப்பது நம் முதல் கடமை.
என்பதை மறந்து மனிதம் அழிப்பதை
மகத்தான செயலாய் கருதும் இந்த
மடையர்கள் திருந்த அருள்செய் இறைவா.
என்று இறைவனை வேண்டி இந்த மிருகங்கள் மனிதர்களாக வேண்டும் என்று கோருவதை தவிர வேறு வழி ஒன்று உண்டென்றால் அது நாம் அவர்களை அழிப்பது ஒன்றேயாகும்.
நீங்க மட்டும் ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க எங்க சங்கத்து சார்பா உங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிவைக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்
\\ சில நாட்களுக்கு முன்னர் உசிலம்பட்டிப் பகுதியில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவர்கள் அப்பகுதியில் உள்ள கடைகளில் மேல் கல் வீசித் தாக்குதல் நடத்தி உள்ளனர். \\
இப்படி நடந்ததா?
எதற்கெடுத்தாலும் பொது மக்களைத் தாக்குவது என்பதுதான் இப்போதெல்லாம் அடிக்கடி நடக்கிறது.
உங்களின் கோபமும், ஆதங்கமும் சரிதான்.
இவர்கள் கல் வீசுவது, அரசு பேருந்துகளை நோக்கி மட்டும்தான். தனியார் பேருந்துகளை நோக்கி வீச மாட்டார்கள். அது மாதிரி, கலகத்தின் போது, சாதாரண மக்களின் வாகனங்கள் மட்டும் எரிக்கப்படும். இது மட்டும் எப்படி சரியாக நட்கின்றது எனப்புரியவில்லை. இராகவன், நைஜிரியா
திருப்பி அடிச்சா சரியாகும்.
நல்ல கருத்த எழுதுனா ஆட்டோ பரிசா தருவிங்களா?
ஆமா ஆட்டோவும் தருவோம் , அது நெறைய ஆளுகளையும் தருவோம்
சண்ட போடுறவங்க அவங்களுக்குள்ள தான் போட்டுக்கிரனும் தவிர மக்களை தொந்தரவு செய்யக் கூடாது.
"சாது மிரண்டா காடு கொள்ளாது " ஆனா சாது எப்பவுமே மெரலவே மெரலாதுங்க.
ஆட்டோவ நல்ல வெலக்கி வித்துட்டு, அந்த ஆளுகளை எல்லாம் அல்லக்கை வேலைக்கு வச்சிக்கோ தல...
ஆட்டோ என்ற சொல்லை ஆட்சேபிக்கிறோம்
வந்துட்டான்யா வந்துட்டான்யா..........
அய்யா ஆட்டோக்கு தமில்ல என்னனு சொல்லணுங்க....
ஆட்டோவை முன்று சக்கர பயணிகள் வாடகை ஊர்தி அப்படின்னு சொல்லுங்க......
போயா டுபாக்கூரு போன தபா உன் பேச்சைக் கேட்டுகுனு டீக் கடையில போயி டீக்குப் பதிலா கொட்டை வடி நீர்னு கேட்டு எல்லாப் பேரும் சேந்து பின்னிட்டானுங்க...
என்னாது கொட்டை வடி நீர் கேட்டயா? அடிக்கிரதோட உன்ன விட்டாங்களே?
ஏங்க அதான் டீக்கு தேநீர் அப்படின்னு ஒரு பெயர் இருக்கே?
தேநீர் என்பதை விட கொட்டை வடி நீர் என்பதே சரியான தமிழ் சொல்.
இன்னும் நீ இங்கேதான் இருக்கையா?
அய்யா தனித்தமிழ், உன்ன்னோட அட்ரஸ் கொடுயா, அய்யயோ மன்னிச்சுக்கோ முகவரி கொடுப்பா
யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஏன்யா அட்ரஸ் கேட்டா கெட்ட வார்த்த சொல்லி திட்டுற,
அது கெட்ட வார்த்தை இல்லை தோழரே, தமிழ் பழமொழி . உங்களிடம் வந்து தமிழ் பேச சொன்னது என்னுடைய தவறுதான் அய்யா.
அப்பிடி ஒதுங்கி ஓடீறு , "தமிலன் என்று சொல்டா தல நிமிந்து நில்லடா " அப்படின்னு ஏங்க கேப்டன் சொல்லிருக்காரு. என்கிட்ட மோதாத
அனானி தோழர்களே இந்தப் பதிவை நான் தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைக்காக எழுதியுள்ளேன் , எனவே உங்கள் கும்மிகளை எனது வேறு காமெடிப் பதிவுகளில் வைத்துக் கொள்ளலாமே..
நன்றி தோழர்களே உங்கள் பங்களிப்பிற்கு.....
இவர்களுக்கும் அப்பாவி பொதுமக்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்.