சனி, 22 நவம்பர், 2008

தோனி கங்குலியை குறை கூற இவர்கள் யார்

இன்னைக்கு காலையிலே செய்திதாள்களில் விளையாட்டு பகுதியில் என்னை எரிச்சலாக்கியது , தோனி பதவி விலகபோவதாக தேர்வு குழுவினரை மிரட்டுகிறார் என்ற செய்திதான் .

ஒரு விசயத்தில் விவாதிக்கும்போது திடீரென இவ்வாறு பேசுவது இயல்பே .
அதை ஏதோ உடனே தோனி பதவி விலகபோவது போல் பெரிய பிரச்சனை ஆக்கிய புண்ணியவான்களை என்ன சொன்னாலும் திருந்த போவது இல்லை .

இதிலும் தினமலர் ஒரு படி மேலே போய் இந்த விஷயம் வெளியாக காரணம் முன்னால் காப்டன் கங்குலி தான் காரணம் என்று புது சர்ச்சையை கிளப்புகிறது .

இவர்களது கற்பனை செய்திகளாலே நல்ல நிலையில் விளையாடி கொன்டிரிந்த கங்குலி ஒய்வு முடிவை எடுத்தார் என்பது என்னுடைய கருத்து.
டோனியோ அணியின் ஒற்றுமை இந்த செய்திகளால் பாதிக்கப்பட்டுவிடுமோ என பயபடுகிறார்.

பதான் தன்னை அவருக்கு எதிரானவர் என என்னிவிடுவாரோ என்று அஞ்சுகிறார் .டோனியின் கூற்றில் நியாயம் இருக்கிறது .பிறகு ஒருவர் தனக்கு எதிராக செயல்படுவதாக ஒருவர் கருதிவிட்டால் அவரின் தலைமையின் கீழ் விளையாட யோசிப்பார் .இது அணியில் பெரும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

அணியின் ஒற்றுமையை குலைக்கும் இது போன்ற நிகழ்வுகளை எந்தவொரு காப்டனும் விரும்பமாட்டார்.இவர்கள் மேலும் ஆர்.பி .சிங்கிர்க்காக தோனி வாதாடுவதை ஏன் இவ்வளவு பெரிய விஷயம் ஆக்கினார்கள் என தெரியவில்லை .

ஆர்.பி.சிங்20 ஓவர் உலக கோப்பையை பெற்று கொடுத்தவர்களில் முக்கியமானவர் .அவரது திறமையின் மீதிருந்த நம்பிக்கையின் காரணமாகவே தோனி அவரை தேர்வு செய்வதில் உறுதியாக இருந்திருக்கவேண்டும் .

மேலும் அவர் தற்போது நல்ல நிலையில் உள்ள பதானையும் அணியில் தேர்வு செய்வதில் உறுதியாக இருந்திருக்கிறார் என்பதை ஏன் இந்த பத்திரிகைகள் வெளியிட வில்லை .

ஒரு முக்கியமான தொடர் நடைபெற்று கொண்டு இருக்கும் வேளையிலா இப்படியொரு செய்தி வெளியிட்டு அவர்களது ஒற்றுமையை குலைக்கவேண்டும்.பத்தாதற்கு வங்க புலி கங்குலியையும் இழுத்துவிட்டார்கள்.

டோனிக்கும் கங்குலிக்கும் பணிபோராம் அதனால் கங்குலிதான் இதை வெளியிட்டாராம் .என்ன கொடுமை இது !டோனியை அணிக்குள் அறிமுகப்படுத்தி அவர் பிரகாசிக்க முடியாமல் தினரியபோதும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து அவரது திறமையை வெளிக்கொணர காரணமாக இருந்த இருவருள் கங்குலியும் ஒருவர் என்பது நாமறிந்தே ஒன்றே .அப்படிப்பட்ட கங்குலிக்கு எதிராக தோனி செயல்படுகிறாராம் .

டோனியோ கங்குலியோ அப்படி செயல்படபோவது இல்லை ;ஆனால் அவர்கள் இந்த மீடியாக்களால் எதிரிகள் ஆவது உறுதி . கங்குலி இன்றைய இளம் இந்திய அணியின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பவர் .இவரின் தலைமையின் கீழ் இந்திய அணியில் நுழைந்த இளைஞர்கள் விபரம் விரேந்திர சேவக் ,
யுவராஜ் சிங் ,
கைப் ,
பதான் ,
ஆர்.பி.சிங் ,
ஸ்ரீ சாந்த்,
தினேஷ் கார்த்திக்,
தோனி,
காம்பீர்,
ரெய்னா ,
பார்த்திவ் படேல்
என இவரது தலைமையில் அணியில் இடம்பிடித்த இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகம் . இவருக்கு எதிராக அணியில் தற்போதுள்ள இளம் வீரர்கள் யாரும் எதுவும் பேச மாட்டார்கள் என்பது உறுதி .

இப்படி எதிர்காலத்தை எண்ணி அதற்குயேற்ப அணியை உருவாக்கிய அவர் கொஞ்சம் முன்கோபி என்பதை வைத்து இந்த மீடியாக்கள் விளம்பரம் தேடி கொள்கின்றன.

டோனியை கங்குலியை போன்ற வீரர்களை குறை கூறுவதை இனியாவது பத்திரிகைகள் தவிர்க்கவேண்டும் .

2 கருத்துகள்:

  1. தாங்கள் சொல்வது மிகச்சரி...அதே நேரத்தில் நான்கு சுவற்றுக்குள் நடந்த தேர்வுக்கழு கூட்டத்தின் சாராம்சங்களை வெளியிட்ட அந்த கயவனை தேர்வுக்குழுவிலிருந்து நீக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு