செவ்வாய், 18 நவம்பர், 2008

வெற்றி நாயகன் டோனி

இன்றைய விளையாட்டு துறையில் வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம் ஆகிவிட்டது .மரியா சரபோவா ,சானியா மிர்சா,லியாண்டர் பயஸ் ,டேவிட் வில்லா,சுக்ராஜ் சிங் ,யுவராஜ் சிங் என வீரர்கள் காயத்தால் அவதிப்படுவது
நாம் அறிந்ததே .

கிரிக்கெட் சமிபகாலமாக அதிகளவில் விளையாடப்பட்டு வருகிறது .
இப்படிப்பட்ட சூழலில் அதிக ஆட்டங்களில் பங்கேற்பதற்காக சென்ற ஆண்டில் நமது கேப்டன் டோனி சென்று வந்துள்ள பயண தூரத்தையும் கேட்டால் நம்மால் நம்ப இயலவில்லை .

கடந்த பதினைந்து மாதங்களில் ஐந்து கண்டங்களில் எட்டு நாடுகளுக்கு கிட்டத்தட்ட ஐம்பது விமானங்களில் 112,000 கிலோமீடேர்கள் பயணம் செய்து
47 ஒரு நாள் போட்டிகள் ,11 டெஸ்ட் போட்டிகள் ,8 இருபது ஓவர் ஆட்டங்கள் என பல போட்டிகளில் பங்கேற்று கலக்கியுள்ளார் .

இவர் இத்தனை போட்டிகளில் பங்கேற்று கலக்கியுள்ளார் என்பது சாதரண விடயம் அல்ல .டெஸ்ட் போட்டிகளில் கூட இவர் விளையாடாமல் தவிர்க்கலாம் .ஆனால் இவர் இல்லாத ஒரு நாள் அணி மாலுமி இல்லாத கப்பல் போல் தவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இத்தனை போட்டிகளிள் பங்கேற்பதில் என்ன விந்தை என சிலர் கேட்கக்கூடும் .
ஒரு விடயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் .உலகிலேயே கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் இந்தியா ஒரு நாட்டின் தலைவர் பதவிதான் மிகவும் கடினமானது .உடன் விளையாடும் வீரர்கள் ,ரசிகர்கள்,வாரியத்தை என பலரது விருப்பங்களை பூர்த்தி செய்யவேண்டும் .

இத்தனை போட்டிகளில் சில போட்டிகளில் விளையாடும்போது அவரது கைவிரல்களில் காயம் ஏற்பட்டபோதிலும் ,ஓய்வின்றி தொடர்ந்து ஆடினார்
என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து அவரது சகா ராபின் உத்தப்பா கேட்டபோது டோனி சிறிது கொண்டாரம்.

இவை தான் அந்த வீரனின் வெற்றி ரகசியங்கள் .அவர் அதிர்சடத்தால் வெற்றி பெறுவதாக கூறுபவர்கள் ,அவரது கடின உழைப்பால்தான் அதிர்ஷ்டம் அவர் வசபட்டுள்ளது என்பதை உணரவேண்டும்.

ஆஸ்திரேலிய தலைவர் பாண்டிங் வழக்கம்போல் தனது அணியின் தோல்வியை ஏற்று கொள்ள இயலாமல் நமது அணியின் இருபது ஓவர் உலக கோப்பை வெற்றியையும் குறை கூறி தன் யார் என்பதை மீடியாகளுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் .இதனால் டோனியின் புகழ் குறைய போவது இல்லை மாறாக பெருகுகிறது.

இந்தியாவில் பெருநகரங்களில் வாழ்பவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த கிரிக்கெட்டுக்குள் பின்தங்கிய மாநிலமான ஜார்கண்டில் இருந்து வந்து இன்று இந்தியாவின் மிச்சல் பெவன் என கூறும் அளவிற்கு பெயர் பெற்றுள்ள ஒரு கூலி தொழிலாளியின் மகனது வெற்றி உழைக்கும் வர்கத்திற்கு கிடைத்த வெற்றி.
மிஸ்டர் கூலாக களத்தில் இருக்கும் தோனி பதட்டப்படாமல் ஆட்டத்தை தான் வெல்வதற்கான களமாக எளிதில் மாற்றிவிடுகிறார் .

இதனாலேயே இவருக்கு முன் அணிக்கு வந்த யுவராஜுக்கு அணி தலைவர் பதவி கிடைக்காமல் இவருக்கு கிடைத்தது. அணிக்கு தேவையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இவரது திறமை இவரது சராசரியை பார்த்தாலே தெரியும் .
சரியான விக்கெட் கீப்பர் கிடைக்காமல் அவதிப்பட்ட இந்திய அணிக்கு இவர் வருகை புது தெம்பை அளித்தது.

கங்குலிக்கு பிறகு அணிக்கு வெற்றி தேடி தரும் ஒரு வலுவான தலைவனாக தோனி உருவெடுத்துள்ளார் எனில் அது மிகை ஆகாது.கபில் டெவில்ஸ் போன்று தற்சமயம் டோனியின் இளைஞர் படை உலகின் எந்த அணியையும் நொறுக்கி தள்ளும் வண்ணம் வலுவாக உள்ளது.

அவரது தலைமை பண்பிற்கு சிறந்த உதரணமாக ஐபிஎல் தொடரில் தனக்கு கிடைத்த சராசரி வீரர்களை கொண்டு இறுதி போட்டி வரை சென்றதை கூறலாம்.
ஃபார்ம் இன்றி தவித்த ரெய்னாவை அதிரடி ஆட்டகாரராக மாற்றி அவரை மேட்ச் வின்னராக மாற்றிய பெருமை தோனியையே சாரும்.

இந்தியாவில் எந்த ஒரு டெஸ்ட் காப்டனும் பெறாத சிறப்பு டோனிக்கு உண்டு அது தான் தலைமை பொறுபேற்ற பின் முதல் மூன்று ஆட்டங்களையும் தொடர்ந்து வென்றதுதான் அது .

இப்படி சிறப்பு வாய்ந்த இளைங்கர் படை தலைவர் தோனி இந்தியாவுக்கு 1983 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உலக கோப்பையை பெற்று தரட்ட்ம் என்று இறைவனை வேண்டுவோம் .

வரவங்க டோனியோட புகல பரப்ப எனக்கு ஒட்டு போடுங்கோ .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக