சனி, 11 அக்டோபர், 2008

தமிழக அரசியல் ஒரு சிறப்பு பார்வை

இந்தியா சுதந்தரம் அடைந்த பிறகு ,நம் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.தமிழ் நாட்டில் பெரியாரின் பகுத்தறிவு பாசறையில் வளர்ந்த அறிஞர் அண்ணாவின் கழகத்தாலும் படிக்காத மேதை காமராசரை வெளியேற்றிய காரணத்தாலும் காங்கிரஸ் தமிழக அரசியலில் தனக்குரிய இடத்தை இழந்தது.அண்ணாவின் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டம் தேர்தலில் தி.மு.கவை மாபெரும் வெற்றி அடைய செய்தது .
மறுபடியும் மிசா காலத்தில் காங்கிரஸ் தேவையில்லாமல் தனது செல்வாக்கை குறைத்து கொண்டது .எம் .ஜி.ஆர் பிறகு தி.மு.கவிலிருந்து பிரிந்து அதிமுகவை தொடங்கி தேர்தலி வெற்றி பெற்றார்.பிறகு அரசியல் சாணக்கியர் கலைஞர் இந்திரா காந்தியுடன் கூட்டணி அமைத்து தமிழக தேர்தல் வரலாற்றிலேயே அதிக இடங்களை கைபற்றியது .பிறகு எம்.ஜி.ஆர் காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டு காங்கிரஸ் தலையெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது .பின்னாளில் இந்தியாவிலேயே தமிழகம் ஒரு மாநிலத்தில்தான் முதல்வர் ஆவதற்கு திரை பட தொடர்பு இருக்க வேண்டும் என்ற பரிதாபகரமான நிலை தோன்றியுள்ளது. விதி விலக்காய் சில கட்சிகள்(பா.ம.க,கம்யுனிஸ்டுகள் போன்றோர்) தற்போதும் கட்சி நடத்தி வருகின்றன.

இதில் நேற்று கட்சி தொடங்கிய சரத்குமார் ,விஜயகாந்த்,கார்த்திக்,ராமதாஸ் என பலரும் சற்றும் சிரிக்காமல் அடுத்த தேர்தலில் நந்தன் தமிழக முதல்வர் என்று நா கூசாமல் பேசுகின்றனர் .ரஜினி பாபா திரைப்படத்தில் கூறுவது போல் ,முதல்வர் பதவி தமிழகத்தில் சாதரணமானது அல்ல .அதற்கு கலைஞர்,ஜெயலலிதா போன்றோர் பட்ட அவமானங்கள் தமிழ் மக்கள் நன்கு அறிவிர்கள் .
அடுத்த தேர்தலிலாவது மக்கள் சிந்தித்து ஓட்டளித்து நமது தமிழகத்தை கக்கமுயலவேண்டும்.(அது mudiyathu)
ஒரு சின்ன காமெடி
டி ஆர் சாரை மறந்துட்டேன் என்னைய மன்னிச்சிடுங்க ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக