ஞாயிறு, 12 அக்டோபர், 2008

கவிதைகள் முழங்கிடும் நேரம்

நான் படைத்த சில சிறு கவிதைகள் ,பதிவர்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன் .
தங்களின் விமர்சனங்களை எதிர் நோக்கி காத்திருக்கும் ஏகலைவன் நான்.
வானவில்
வானத்தில் தோன்றும் ஏழு வண்ண வளைவு
மழை நின்ற வானில் சூரியனின் வண்ண ஓவியம்
அர்ஜுனன் வில்லா ஏகலைவன் வில்லா
பாரினில் நல்லாசிரியர் என பார் போற்றினாலும்
பொதுவான கல்வியை தீண்டாமையால்
மறுத்த துரோணரின் வில்லா என என்னுள் எழும்
கேள்விகள் ஆயிரம் ஆயினும்
இனி வரும் காலம் வரலாறை மாற்றும்.

தேடல்
வாழ்க்கை ஒரு போர்களம்
அதில் சாகும் வரை போராடு
வாழ்க்கை ஒரு பயணம்
அதன் சுவாரசியத்தை உணர்
வாழ்க்கை ஒரு சொர்க்கம்
நீ அதை பார்க்கும் பார்வையில்
வாழ்க்கை ஒரு தேடல்
அதில் உன் நண்பனை தேடு
உன் நண்பர்களிடத்தில் நீ எதிர்பார்ப்பதை
நீ அவர்களுக்கு வழங்கு
என்றும் மகிழ்வுடன் வாழ பழகு

தாயன்பு
ஆண்டவன் வழங்கிய அரிய
பொக்கிஷம்
தாய் தன் மகனுக்கு

எதிலோ படித்தது
நேற்று என்பது உடைத்த பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது உன் கையில் உள்ள வீணை

தோழன்
தோல்விகள் தான் உன் பலவீனங்களை
உனக்கு சுட்டி காட்டும் தோழன்
வெற்றி உன் பலத்தை காட்டி
உன்னை மண்ணாக்கும் எதிரி
தோல்விகள் நம்மை பலபடுத்தும்
வெற்றிகள் பிறரை காயபடுத்தும்
வெற்றி நமக்கு தேவை
தோல்விகள் தரும் அந்த போதை
முயல்பவன் முத்திரை பதிப்பான்
முயலாதவன் காரணங்கள் தேடுவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக