சிறந்த சுழல் பந்துவீச்சாளர் :அஜந்தா மென்டிஸ்
சென்ற ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இவரது நிலைப்பாடு
3 போட்டிகளில் பங்கேற்று 26 விக்கெட்டுகளை 18.38 எனும் சராசரியோடு கைப்பற்றியுள்ளார்.
ஒரு நாள் போட்டிகளில் இவரது செயற்பாடு
18 போட்டிகளில் பங்கேற்று 48 விக்கெட்டுகளை 10.12 எனும் சராசரியோடு கைபற்றி அசத்தியுள்ளார்.
கிரிக்கெட்டினுள் நுழையும்போதே தன் திறமை முழுவதையும் மிக அற்புதமாக வெளிப்படுத்தி ஜொலித்த மென்டிஸ் தான் இந்த ஆண்டின் மிக சிறந்த பந்து வீச்சாளரும் ஆவார்.
சிறந்த வேக பந்து விச்சாளர்கள்:
இந்த துறையில் இந்த ஆண்டு பலர் ஜொலித்து உள்ளனர்.
டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்ரிக்காவின் டேல் ஸ்டைன் ,இந்தியாவின் ஜாகிர் கான் ,இஷாந்த் சர்மா ,பாகிஸ்தானின் தன்வீர்,இங்கிலாந்து அணியின் பிளின்டாப் ,ஆஸ்திரேலியாவின் லீ ,ஜான்சன் என இந்த பட்டியல் நீளும்.சில வீரர்களை நான் குறிப்பிடாமல் விட்டிருக்கலாம்.
இவர்களுள் என்னை கவர்ந்தவர் ஜாகீர் கான்.
இவர் தனது இழந்த மீட்டதோடு நில்லாமல் வேகபந்து வீச்சுக்கு ஒத்துழைக்காத இந்திய மைதானங்களிலும் அசத்த கூடிய அளவிற்கு முன்னேறியுள்ளார்.அனுபவ வீரராக இவர் பிற வீரர்களின் பந்து வீச்சில் காணப்படும் குறைகளையும் களைந்து அணிக்கு உற்சாகம் ஊட்டுகிறார். பிறரையும் நல்லவிதமாக செயல் பட தூண்டும் இவரே இந்த ஆண்டின் சிறந்த வேக பந்து வீச்சாளர் ஆவார்.
சிறந்த பீல்டர்கள் :
யுவராஜ் சிங்:ஸ்டைலான தோரணை பாண்டியான இவர பத்தி சொல்லவே வேணாம். பந்த பிடிக்க இவர் எடுக்குற ரிஸ்க் சூப்பர்.
சுரேஷ் ரெய்னா : இந்தியாவின் மிக அற்புதமான பீல்டர்களில் ஒருவர்.தனது திறமைக்கு ஏற்ப துடிப்பாக பீல்டிங் செய்யும் இவர் என் கனவு அணியில் நிரந்தரமானவர்.
இங்கிலாந்து அணியின் காலிங்க் வூட்டின் பீல்டிங் அற்புதம் முப்பத்திரெண்டு வயதிலும் இவரது பீல்டிங் கங்காருவை நியாபக படுத்துகிறது.
சிறந்த விக்கெட் கீப்பர்கள்:
ஆடம் கில்க்ரிஷ்டின் விலகலுக்கு பிறகு சிறந்த விக்கெட் கீப்பர் யார் என்பதில் இந்தியாவின் தோனி ,தென்னாப்ரிக்காவின் பௌச்சர் ,இலங்கையின் சங்கக்கரா ஆகியோரிடேயே பலத்த போட்டி நிலவுகிறது. இனி வரும் காலங்களில் தான் யார் சிறந்த விக்கெட் கீப்பர் என தெரிய வரும்.
சிறந்த டெஸ்ட் மட்டையாளர் :
இந்தியாவின் அதிரடி துவக்க வெட்டு சேவக் தான் இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் மட்டையாளர். இந்த குவித்துள்ள ரன்கள் 1492 ஆகும்.
சிறந்த ஒரு நாள் போட்டி மட்டையாளர்:
கவுதம் காம்பிர் தான் இந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் போட்டி மட்டையாளர் ஆவார்.
சிறந்த அனைத்து ஆட்டக்காரர் :
ஜார்கண்ட் சிங்கம் டோணிதான் அவர்.
இந்த ஆண்டின் சிறந்த வீரர் கவுதம் காம்பிர் ஆவார்.
வரவங்க ஓட்ட போட்டு தாக்குங்கோ!
நீங்க மட்டும் ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க எங்க சங்கத்து சார்பா உங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிவைக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்
\\ சில நாட்களுக்கு முன்னர் உசிலம்பட்டிப் பகுதியில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவர்கள் அப்பகுதியில் உள்ள கடைகளில் மேல் கல் வீசித் தாக்குதல் நடத்தி உள்ளனர். \\
இப்படி நடந்ததா?
எதற்கெடுத்தாலும் பொது மக்களைத் தாக்குவது என்பதுதான் இப்போதெல்லாம் அடிக்கடி நடக்கிறது.
உங்களின் கோபமும், ஆதங்கமும் சரிதான்.
இவர்கள் கல் வீசுவது, அரசு பேருந்துகளை நோக்கி மட்டும்தான். தனியார் பேருந்துகளை நோக்கி வீச மாட்டார்கள். அது மாதிரி, கலகத்தின் போது, சாதாரண மக்களின் வாகனங்கள் மட்டும் எரிக்கப்படும். இது மட்டும் எப்படி சரியாக நட்கின்றது எனப்புரியவில்லை. இராகவன், நைஜிரியா
திருப்பி அடிச்சா சரியாகும்.
நல்ல கருத்த எழுதுனா ஆட்டோ பரிசா தருவிங்களா?
ஆமா ஆட்டோவும் தருவோம் , அது நெறைய ஆளுகளையும் தருவோம்
சண்ட போடுறவங்க அவங்களுக்குள்ள தான் போட்டுக்கிரனும் தவிர மக்களை தொந்தரவு செய்யக் கூடாது.
"சாது மிரண்டா காடு கொள்ளாது " ஆனா சாது எப்பவுமே மெரலவே மெரலாதுங்க.
ஆட்டோவ நல்ல வெலக்கி வித்துட்டு, அந்த ஆளுகளை எல்லாம் அல்லக்கை வேலைக்கு வச்சிக்கோ தல...
ஆட்டோ என்ற சொல்லை ஆட்சேபிக்கிறோம்
வந்துட்டான்யா வந்துட்டான்யா..........
அய்யா ஆட்டோக்கு தமில்ல என்னனு சொல்லணுங்க....
ஆட்டோவை முன்று சக்கர பயணிகள் வாடகை ஊர்தி அப்படின்னு சொல்லுங்க......
போயா டுபாக்கூரு போன தபா உன் பேச்சைக் கேட்டுகுனு டீக் கடையில போயி டீக்குப் பதிலா கொட்டை வடி நீர்னு கேட்டு எல்லாப் பேரும் சேந்து பின்னிட்டானுங்க...
என்னாது கொட்டை வடி நீர் கேட்டயா? அடிக்கிரதோட உன்ன விட்டாங்களே?
ஏங்க அதான் டீக்கு தேநீர் அப்படின்னு ஒரு பெயர் இருக்கே?
தேநீர் என்பதை விட கொட்டை வடி நீர் என்பதே சரியான தமிழ் சொல்.
இன்னும் நீ இங்கேதான் இருக்கையா?
அய்யா தனித்தமிழ், உன்ன்னோட அட்ரஸ் கொடுயா, அய்யயோ மன்னிச்சுக்கோ முகவரி கொடுப்பா
யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஏன்யா அட்ரஸ் கேட்டா கெட்ட வார்த்த சொல்லி திட்டுற,
அது கெட்ட வார்த்தை இல்லை தோழரே, தமிழ் பழமொழி . உங்களிடம் வந்து தமிழ் பேச சொன்னது என்னுடைய தவறுதான் அய்யா.
அப்பிடி ஒதுங்கி ஓடீறு , "தமிலன் என்று சொல்டா தல நிமிந்து நில்லடா " அப்படின்னு ஏங்க கேப்டன் சொல்லிருக்காரு. என்கிட்ட மோதாத
அனானி தோழர்களே இந்தப் பதிவை நான் தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைக்காக எழுதியுள்ளேன் , எனவே உங்கள் கும்மிகளை எனது வேறு காமெடிப் பதிவுகளில் வைத்துக் கொள்ளலாமே..
நன்றி தோழர்களே உங்கள் பங்களிப்பிற்கு.....
இவர்களுக்கும் அப்பாவி பொதுமக்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்.