ஆராரிராரோ
நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் சொர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே...
அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் அழைக்கிறதே
ஆராரிராரோ
நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
வேர் இல்லாத மரம் போல் என்னை நீ பூமியில் நாட்டையே
ஊர் கண் எந்தன் மேலே பட்டாள் உன் உயிர் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம் நீ சொல்லி தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்தி சென்றாயே
உனக்கே.. ஓர் தொட்டில் கட்டி நானே தாயை மாறிட வேண்டும்
உனக்கே.. ஓர் தொட்டில் கட்டி நானே தாயை மாறிட வேண்டும்
ஆராரிராரோ
நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம் நோய் தீர்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசைதுறந்த கண் தூங்காத உயிர் அல்லவா?
காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியின் மேலே சுழலாத பூமியும் நீ
இறைவா.. நீ ஆணை இடு, தாயே எந்தன் மகளாய் மாற..
ஆராரிராரோ
நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
நல்ல முயற்சி......வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோ!!அப்பிடியே வோர்ட் வெரிபிகேசன் 'ஐயும் நீக்கி விடுங்கள்.கமென்ட் பண்ண இலகுவாய் இருக்கும்'!! !
பதிலளிநீக்கு