வெள்ளி, 27 மே, 2011

சக்கரை நிலவே - யூத்

சக்கரை  நிலவே  பெண் நிலவே 
காணும்  போதே  கரைந்தாயே .
நிம்மதி  இல்லை  ஏன்  இல்லை  நீ  இல்லையே
(2)
மனம்  பச்சை  தண்ணீ  தான்  பெண்ணே
அதை  பற்ற  வைத்து  உன்  கண்ணே
என்  வாழ்கை  என்னும்  கட்டை  எரித்து
குளிர்   காய்ந்தாய்  கொடுமை  பெண்ணே
கவிதை  பாடின  கண்கள்
காதல்  பேசின  கைகள்
கடைசியில்  எல்லாம்  பொய்கள்
என்  பிஞ்சு  நெஞ்சு  தாங்குமா ?

(
சக்கரை  நிலவே .........)

காதல்  என்று  ஒன்று  ஒரு  குழந்தை  போல
வாயை  மூடி  அழுமே  சொல்ல  வார்த்தை  இல்லை 
அன்பே  உன்  புன்னகை  எல்லாம்  அடி  நெஞ்சில்  சேமித்தேன்
கண்ணே  உன்  புன்னகை  எல்லாம்  கண்ணீரை  உருகியதே  
வெள்ளை  சிரிப்புகள்  உன்  தவறா?
அதில்  கொள்ளை  போனது  என்ன  தவறா?
பிரிந்து  சென்றது  உன்  தவறா ?
அதை  புரிந்துகொண்டது  என்ன  தவறா ?
ஆண்  கண்ணீர் பருகும்  பெண்ணின்  இதயம்  சதையல்ல  கல்லின் 
சுவரா ?

(
கவிதை  பாடின...........)

நவம்பர்  மாத  மாலையில்  நான்  நனைவேன்  என்றேன் 
எனக்கும்  கூட  நனைதல்  மிக  பிடிக்கும்  என்றாய்
மொட்டை  மாடி  நிலவில்  நிலவில்  நான்  குளிப்பேன்  என்றேன்
எனக்கும்  அந்த  குளியல்  மிக  பிடிக்கும்  என்றாய்
சுகமான  குரல்  யார்  என்றால்  சுசீலா வின்  குரல்  என்றேன்
எனக்கும்  அந்த  குரலில்  ஏதோ  மயக்கம்  என  நீ  சொன்னாய் 
கண்கள்  மூடிய  புத்தர்  சிலை  என்  கனவில்  வருவது 
பிடிக்கும்  என்றேன்
தாயகம்  என்பது  சிறிதும்  இன்றி
அது  எனக்கும்  எனக்கும்  தான்  பிடிக்கும்  என்றாய்
அடி  உனக்கும்  எனக்கும்  எல்லாம்  பிடிக்க  என்னை  என்  பிடிக்காதென்றாய்

(
சக்கரை  நிலவே...........)



1 கருத்து:

  1. உங்களுக்கு ஏதேனும் பாடலின் வரிகள் தேவைப்படின் கருத்துரையில் தெரிவியுங்கள் பதிவிட முட்யல்கிறேன்

    பதிலளிநீக்கு